இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கான விசேட தகவல்
Yuga
3 years ago

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடைமுறையை சுகாதார அமைச்சு மீண்டும் திருத்தங்களுக்கு உட்படுத்தியுள்ளது.
அதன்படி, முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு முன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் அல்லது சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவிடம் அனுமதி பெற தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அவ்வாறு நாட்டிற்கு வருகைத்தரும் அனைவரும் நாட்டுக்குள் நுழைந்தவுடன் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.



