கொழும்பில் விசேட தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்

Yuga
3 years ago
கொழும்பில் விசேட தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்

மேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி சேவை இன்று (வியாழக்கிழமை) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சமூகத்தில் உள்ள வயோதிபர்கள், நோய் பாதிப்புக்களுக்கு உள்ளானவர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் பலவீனமானவர்களின் நலன் கருதி இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய, முதற்கட்ட தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளவர்கள் இலங்கை இராணுவ வைத்திய படையினருடன் தொடர்புகொண்டு முன்பதிவினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, இராணுவ நோய் தடுப்பு மற்றும் மனநல மருத்துவ பணியகத்தின் 1906 அல்லது 011 28 60 002 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு முற்பதிவு செய்வதன் ஊடாக தடுப்பூசிகளை வீட்டிலேயே செலுத்திக்கொள்ள முடியும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!