இன்றைய ராசிபலன் (22.10.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
4 hours ago
இன்றைய ராசிபலன் (22.10.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:

அசுவினி: முன்னேற்றமான நாள். உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். உங்கள் செயல்கள் லாபமாகும்.

கார்த்திகை 1: கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்சினை விலகும்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். எதிர்ப்பு விலகும். உடல்நிலை சீராகும்.

ரோகிணி: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழிலில் இருந்த போட்டியாளர் விலகுவர்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: குழப்பம் தவிர்க்க வேண்டிய நாள். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும்.

திருவாதிரை: நீங்கள் ஈடுபடும் வேலைகளில் சிறு சிறு தடைகள் தோன்றினாலும் முடிவு சாதகமாகும்.

புனர்பூசம் 1,2,3: உங்கள் முயற்சிக்கேற்ற வருவாய் வரும். பணியிடத்தில் சிறு பிரச்னை ஏற்பட்டு மறையும்.

கடகம்:

புனர்பூசம் 4: பணியிடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

பூசம்: செயலில் நெருக்கடி உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும் என்றாலும் போராடி சாதிப்பீர்.

ஆயில்யம்: வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர் என்றாலும் உங்கள் அணுகுமுறையால் ஆதாயமடைவீர்.

சிம்மம்:

மகம்: தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டிய நாள். மறைமுக எதிர்ப்பாளர்களை அறிவீர்கள்.

பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்.

உத்திரம் 1: மற்றவரால் செய்ய முடியாத வேலையை முடிப்பீர். வருமானம் திருப்தி தரும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் உங்கள் கவனம் அவசியம்.

அஸ்தம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

சித்திரை 1,2: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

துலாம்:

சித்திரை 3,4: தெளிவாக செயல்பட்டு தேவைகளை அடையும் நாள். வியாபாரத்தில் வருமானம் கூடும்.

சுவாதி: உழைப்பு அதிகரிக்கும். மனம் குழப்பமடையும். செயல்களில் தடுமாற்றம் அடைவீர்.

விசாகம் 1,2,3: உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் தேடிவந்து சமாதானம் பேசுவர்.

விருச்சிகம்:

விசாகம் 4: செலவுகள் வழியே நினைத்ததை சாதிப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

அனுஷம்: வாகன வகையில் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும்.

கேட்டை: எதிர்பாராத செலவுகள் தோன்றும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது அவசியம்.

தனுசு:

மூலம்: வரவால் வளம் காணும் நாள். நீங்கள் நினைத்திருந்த வேலைகள் நடந்தேறும்.

பூராடம்: வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.

உத்திராடம் 1: மூன்றாமிட ராகுவால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். பொருளாதார நிலை உயரும்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: வியாரத்தில் லாபம் காணும் நாள். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள்.

திருவோணம்: நினைப்பதை சாதிப்பீர். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அவிட்டம் 1,2: உங்கள் அணுகுமுறையால் நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விஐபிகளால் உங்கள் வேலைகள் முடியும்.

சதயம்: பெரிய மனிதர்களின் ஆதரவால் நீங்கள் எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

பூரட்டாதி 1,2,3: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.

மீனம்:

பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் நிலவும்.

உத்திரட்டாதி: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்கள் முயற்சியில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும்.

ரேவதி: வழக்கமான வேலைகளில் ஆதாயம் காண்பீர். புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!