19 வயது ஆசிரியை மரணம் - ஹரியானாவின் 2 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தம்
#India
#Death
#Women
#suspend
#Teacher
#Internet
Prasu
1 month ago

19 வயது ஆசிரியையின் மரணம் தொடர்பாக பரவலான பொதுமக்கள் சீற்றத்திற்கு மத்தியில், ஹரியானா அரசு பிவானி மற்றும் சர்கி தாத்ரி மாவட்டங்களில் மொபைல் இணையம், மொத்த எஸ்எம்எஸ் மற்றும் ஏனைய இணைய சேவைகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 13 ஆம் தேதி பிவானியில் உள்ள ஒரு வயலில் ஆசிரியை மனிஷாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு, ஒரு நர்சிங் கல்லூரி சென்றதாகக் கூறப்பட்ட பின்னர் அவர் காணாமல் போனார்.
உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுமிதா மிஸ்ரா பிறப்பித்த உத்தரவில், ஆகஸ்ட் 19 ஆம் தேதி காலை 11 மணி முதல் ஆகஸ்ட் 21 ஆம் தேதி காலை 11 மணி வரை இணைய முடக்கம் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



