பாகிஸ்தான் வெள்ளம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 302ஆக உயர்வு
#Death
#people
#Pakistan
#Flood
#Climate
Prasu
3 months ago
பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளத்தால் சமீபத்திய நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது. நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்படி, 302 பேர் இறந்துள்ளனர் மற்றும் 727 பேர் காயமடைந்துள்ளனர்.
திங்கட்கிழமை வெள்ளத்தில் சிக்கி மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கைபர் பக்துன்க்வா பகுதியில் 71 பேர் உயிரிழந்துள்ளனர். சிந்து மாகாணத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
பலுசிஸ்தானிலும் வெள்ளம் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பருவமழை தொடங்கியதிலிருந்து, பாகிஸ்தானில் 1,678 வீடுகள் சேதமடைந்துள்ளன, அவற்றில் 563 வீடுகள் முழுமையாகவும், 1,115 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
