சூதாட்டத்திற்காக வங்கியில் பண மோசடி செய்த மேலாளர் கைது

கோடக் மஹிந்திரா வங்கி கிளை மேலாளர் சூதாட்டத்திற்காக ரூ.31 கோடி பொதுப் பணத்தை மோசடி செய்துள்ளார்.
இந்திய மாநிலமான பீகாரில் உள்ள கோட்டக் மஹிந்திரா வங்கியின் ஒரு கிளை மேலாளர் சூதாட்டம் மற்றும் பந்தய செயலிக்கு அடிமையாகி உள்ளார்.
இவர், கடந்த 2 ஆண்டுகளாக பீகார் அரசின் பொது பணத்தில் இருந்து கோடிக்கணக்கில் திருடியுள்ளார். அந்த பணத்தை வைத்து பந்தயம் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, பிஹார் அரசின் மாவட்ட நிலம் கையகப்படுத்தல் அதிகாரிக்கான காசோலைகளில் கையெழுத்து போட்டும் காசோலை குளோனிங் மூலமாகவும் ரூ.31.93 கோடியை மோசடி செய்துள்ளார்.
இதில் இருந்து மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக வாடிக்கையாளர்களின் ஆதார் மற்றும் கேஒய்சி விவரங்களை தவறாக பயன்படுத்தியுள்ளார். இதை வைத்து 21 போலி வங்கிக் கணக்குகளை திறந்துள்ளார்.
இதன் மூலமாக பணத்தை பரிமாற்றம் செய்து வெளிநாடுகளில் உள்ள பந்தய செயலிக்கு பணம் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, வங்கி ஊழியர் ஒருவர் கடந்த 2021-ம் ஆண்டில் சந்தேகம்படும்படியான ஆர்டிஜிஎஸ் பரிமாறத்தைக் கண்டுபிடித்த போது தான் இந்த மோசடி வெளிவந்துள்ளது. பின்னர், கோடக் மஹிந்திரா வங்கி கிளை மேலாளர் கைது செய்யப்பட்டார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



