இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுப்பாடு : அலுவலக பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!
#India
#SriLanka
#pollution
Thamilini
1 year ago
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் காற்று மாசுப்பாடு அதிகரித்து வருகின்ற நிலையில், அலுவலகங்களில் பணிப்புரிபவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே அடர்த்தியான, நச்சுப் புகை மூட்டம் நகரத்தை சூழ்ந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பான வரம்பை விட காற்று மாசுபாடு 50 மடங்கு அதிகமாக உள்ளது. பள்ளிகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில்கடுமையான புகை மூட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் முயற்சி செய்து வருவதால், அனைத்து அலுவலகங்களும் 50% திறனில் செயல்பட புது தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.