பெருவில் சில பகுதிகளில் அவசர நிலை பிரகடனம்
#StateOfEmergency
#Peru
#WildFire
Prasu
11 months ago

பெரு நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 3000 ஹெக்டேர் நிலம் தீயில் கருகி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல மாதங்கள் கடுமையான காட்டுத் தீக்குப் பிறகு, புதன்கிழமை அமேசான் மழைக்காடுகளின் பல பகுதிகளில் அவசரகால நிலை அறிமுகப்படுத்தப்பட்டது.
பெரு நாட்டின் அதிபர் டினா போலுவார்டே அவசர நிலையை அறிவித்துள்ளார். பருவநிலை மாற்றத்தின் விளைவாக மழை இல்லாத காரணத்தால் தீ விபத்துகள் ஏற்பட்டதாக பெரு நாட்டின் அதிபர் டினா போலுவார்டே மேலும் கூறினார்.
பெரு நாட்டின் வனவியல் மற்றும் வனவிலங்குகளுக்கான தேசிய நிறுவனம் பருவநிலை மாற்றத்தால் காட்டுத்தீ பரவுவதை எளிதாக்கியுள்ளது என்று கூறியுள்ளது.



