மூன்று ஆண்டுகளில் ஏழாவது முறையாக பல்கேரியாவில் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல்
#Election
#Parliament
#Bulgaria
Prasu
8 months ago

பல்கேரியாவில் அதன் அரசியல் கட்சிகள் கூட்டணி ஆட்சியை ஏற்கத் தவறியதைத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளில் ஏழாவது முறையாக அக்டோபர் 27ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் என்று அதிபர் ரூமென் ராடேவ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வரை கருங்கடல் தேசத்தை வழிநடத்த டிமிடர் கிளாவ்சேவ் தலைமையிலான ஒரு காபந்து அரசாங்கம் பல்கேரியாவின் பாராளுமன்றத்தில் பதவியேற்பதாக ராதேவ் கூறியுள்ளார்.
“அக்டோபர் 27 ஆம் திகதி முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து நாளை நானும் ஒரு ஆணையை வெளியிடுவேன்” என்று கிளாவ்சேவ் தனது இடைக்கால அரசாங்கத்தை ஜனாதிபதியிடம் முன்வைத்த பின்னர் ராதேவ் கூறியுள்ளார்.



