சீனாவில் கனமழையால் ஏற்பட்ட 11 பேர் மரணம் மற்றும் பலர் மாயம்
#China
#Death
#Flood
#HeavyRain
Prasu
11 months ago

இந்த வாரம் வடகிழக்கு சீனாவில் ஒரு நகரத்தை புரட்டிப்போட்ட கனமழையால் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மற்றும் 14 பேர் காணாமல் போயுள்ளனர்.
அதே நேரத்தில் $1 பில்லியனுக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“வரலாற்று ரீதியாக அரிதான” அழிவுகரமான மழையின் போது காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க மீட்புப் பணியாளர்கள் இன்னும் முயற்சித்து வருகின்றனர்.
பூர்வாங்க மதிப்பீடுகளின்படி, 188,800 பேர் இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 10.3 பில்லியன் யுவான் (சுமார் $1.4 பில்லியன்) இழப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.



