இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டுவரப்பட்ட யானையை கருணைக்கொலை செய்ய முடிவு

#Switzerland #Elephant #Euthanasia #SriLankan
Prasu
1 year ago
இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டுவரப்பட்ட யானையை கருணைக்கொலை செய்ய முடிவு

பல ஆண்டுகளுக்குமுன் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டுவரப்பட்ட யானை ஒன்றைக் கருணைக்கொலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு பறந்தது Ceyla-Himali என்னும் பெண் யானை.

அப்போது அவளுக்கு ஒரு வயது கூட ஆகவில்லை. சுவிட்சர்லாந்தில் சூரிச்சில் ஒரு விலங்கியல் பூங்காவில் வாழ்ந்துவந்த Ceyla-Himali, ஆறு குட்டிகளை ஈன்று, பல குட்டி யானைகளை வளர்க்கவும் உதவினாள்.

ஆனால், Ceyla-Himaliயால் இப்போது சரியகாக நிற்கக்கூட முடியவில்லை. அவளுக்கு ஜூலை மாதம் 1ஆம் திகதி 49ஆவது வயது பிறந்தது. வயதானதால் பல பிரச்சினைகள் ஏற்பட்டதுடன், Ceyla-Himaliயின் சிறுநீரகங்களும் சரியாக இயங்கவில்லை. 

அவளால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை. ஆகவே, Ceyla-Himaliயின் உடல் நிலையை ஆராய்ந்த மருத்துவர்கள், அவளது நலன் கருதி அவளை கருணைக்கொலை செய்வதென நேற்று முடிவு செய்துள்ளார்கள்.

இப்போது சூரிச் விலங்கியல் பூங்காவில் Ceyla-Himaliயின் இரண்டு மகள்களான Panang (35)ம் Farha (19ம், Thai என்னும் ஆண் யானையுடன் வாழ்ந்துவருகிறார்கள்.

 Ceyla-Himali உயிரிழந்த நிலையில், அவர்கள் விரைவில் குட்டிகளை ஈன்றெடுப்பார்கள் என சூரிச் விலங்கியல் பூங்கா அதிகாரிகள் நம்புகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!