காஸாவில் பள்ளி கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : பலி எண்ணிக்கை உயர்வு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த காஸா நகரில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதலை நடத்தியது.
70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பலத்த சேதம் அடைந்தவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிய செய்தி தொடர்பாளர் கூறுகையில், பள்ளி கட்டிடம் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக அண்டை நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.