போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளின் தகவல்களை திரட்டும் அதிகாரிகள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் பற்றிய தகவல்கள் தரவு அமைப்பில் உள்ளிடப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
குற்றத்தின் தன்மை, சம்பந்தப்பட்ட காவல் நிலையம், ஓட்டுநர் உரிமம் மற்றும் தொலைபேசி எண் விவரங்கள் அபராதம் செலுத்தப்படும் தபால் நிலையங்கள் மூலம் இந்த தரவு அமைப்பில் உள்ளிடப்படுகின்றன என்று அவர் கூறுகிறார்.
இதேவேளை, இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் தேவைப்படும் வெளிநாட்டவர்கள் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் விமான நிலையத்தில் விண்ணப்பித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



