பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்: பிரேரணை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை
#SriLanka
#Parliament
Mayoorikka
2 years ago
பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று காலை ஆரம்பமாகியுள்ளன. இந்த வாரம் 03 நாட்களுக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பிரேரணை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை (21) நடைபெறவுள்ளது.
நாளை காலை 10.30 மணி முதல் மாலை 05.30 மணி இந்த விவாதம் நடைபெற உள்ளது.
இதேவுளை, மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சார்பில் நாளை மறுதினம் அனுதாப பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.