இளைஞர்களை தொழில் முயற்சியாளர்களாக மாற்றுவதுதான் ஜனாதிபதியின் இலக்கு : பிரசன்ன ரணவீர!
தற்போதைய இளைஞர்களை எதிர்கால உலகிற்கு ஏற்ற வெற்றிகரமான தொழில்முயற்சியாளர்களாக உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாகும் என சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.
வரலாற்றில் முதன்முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தொழில் நிறுவனங்களின் அபிவிருத்திக்காக 30 பில்லியன் ரூபா கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், தொழில்முனைவோருக்கு தேவையான மூலதனத்தை 2% கீழ் வழங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
கடன் வட்டி நிவாரணம். நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ”நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.8% இருக்கும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் பணியை எங்கள் அமைச்சகம் கொண்டுள்ளது.
2028ஆம் ஆண்டுக்குள் தொழில்முனைவோர் எண்ணிக்கையை 10% ஆக உயர்த்துவதே எங்கள் இலக்கு. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். அதற்காக அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து பெரிய பணியை செய்து வருகிறோம்.
200,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் G.E.C தேர்ச்சி பெற்ற பிறகு வேலை சந்தையில் நுழைகிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேலை சந்தையில் வாய்ப்பு இல்லை. எனவே அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற விரும்புகிறோம்.
முச்சக்கரவண்டியுடன் வீதியில் செல்லும் குழந்தையை மீட்டு அவர்களுக்கு தேவையான அறிவையும் பயிற்சியையும் வழங்குவோம் என நம்புகிறோம். வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து, நிறுவன அபிவிருத்திக்காக சிறிய கடன் திட்டத்திற்கு 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர்களுக்கு தேவையான மூலதனம் 2% கடன் வட்டி சலுகையின் கீழ் வழங்கப்படும். தற்போதைய இளைஞர் சந்ததியை எதிர்கால உலகிற்கு ஏற்ற வெற்றிகரமான தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.