பெருந்திரளான மக்களின் கண்ணீரால் நனைந்தது கனகபுரம் துயிலுமில்லம்!
#SriLanka
#Kilinochchi
#Tamil People
Mayoorikka
7 months ago
கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் மிக எழுச்சியுடன் இடம்பெற்றது.
இன்று மாலை சரியாக 6.05 மணியளவில், பிரதான சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
பெருந்திரளான மக்கள் இதில் கலந்து கொண்டு தமது மாவீரர்களாகிப் போன தமது உறவுகளை நினைந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர் .