துறைமுக நகரை “கொழும்பு நிதி வலயமாக” மாற்ற தீர்மானம்
#SriLanka
#Colombo
#Ranil wickremesinghe
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Kanimoli
2 years ago
துறைமுக நகரை “கொழும்பு நிதி வலயமாக” மாற்றும் வகையில் கடல்கடந்த நடவடிக்கைகள் தொடர்பில் தேவையான சட்ட ஏற்பாடுகளுடன் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்டமூலம் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர் இந்த வருட இறுதிக்குள் இது நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வர்த்தக மத்தியஸ்த மாநாட்டில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.