சனல்-4 காணொளியை பரிசோதிக்குமாறு மைத்திரி ஐநாவிடம் கோரிக்கை..

#SriLanka #Meeting #Maithripala Sirisena #Lanka4
Prathees
10 months ago
சனல்-4  காணொளியை பரிசோதிக்குமாறு மைத்திரி ஐநாவிடம் கோரிக்கை..

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிரான்சேவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (22) முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

 நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட அம்பலப்படுத்தல் தொடர்பில் முறையான மற்றும் தொழில்சார்ந்த உள்ளூர் விசாரணைக்கு சர்வதேச தொழில்நுட்ப ஆதரவைக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிரான்சிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.