அருணனுக்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார் தியாகேந்திரன் வாமதேவா!
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியொன்றில் கலந்துக்கொள்ள இருக்கும் அருணனுக்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் நிதி உதவியை இன்றைய தினம் (20.09) தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் தியாகேந்திரன் வாமதேவா வழங்கியுள்ளார்.
ஏற்பாட்டாளர்கள் அறிவித்த வங்கி கணக்கில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த போட்டியில் கலந்துகொள்ளும் சுதர்சன் அருணனை பாராட்டிய அவர், பலதுறைகளிலும் சிறந்து விளங்கும்படியாக அர்ப்பணிப்புடன் பிள்ளையை வளர்க்குமாறு பெற்றோருக்கு ஆலோசனையும் வழங்கினார் .



