இணையத் தாக்குதல் தொடர்பான விசாரணையை ஆகஸ்ட் 26ஆம் திகதி நடத்துமாறு பணிப்புரை
#SriLanka
#Attack
#government
#Lanka4
#technology
#Tamilnews
#sri lanka tamil news
Kanimoli
2 years ago
இலங்கை அரசாங்கத்தின் கீழ் இயங்கும் gov.lk என்ற டொமைன் பெயரில் மின்னஞ்சல் அமைப்பு மீது மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல் தொடர்பான விசாரணையை ஆகஸ்ட் 26ஆம் திகதி நடத்துமாறு தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, இந்த விசாரணையை மேற்கொள்ளுமாறு தகவல் தொடர்பாடல் முகவர் மற்றும் இலங்கை கணினி அவசர பதில் மன்றத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
தரவு இழப்பு மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு அதன் நிதி மதிப்பு உட்பட பல அம்சங்களின் கீழ் இந்த விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.