ரயில் சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
#SriLanka
#Travel
#Train
#Gazette
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
1 year ago

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (12) மாலை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய பயணிகள் ரயில் சேவை, பொருள் விநியோகம் ஆகிய சேவைகள் ரயில்வே திணைக்களத்தினாலும் அதனுடன் இணைந்த சேவைத்துறையினராலும் தடையின்றி, பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.



