வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்!
#SriLanka
#Central Bank
#Tamilnews
#sri lanka tamil news
#money
#Foriegn
Mayoorikka
1 year ago

கடந்த ஓகஸ்ட் மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 499.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த ஓகஸ்ட் மாதம் வரையிலான பணவனுப்பல்கள் 3,862.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
இது கடந்த 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 74.4 சதவீத அதிகரிப்பு என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.



