துமிந்த நாகமுவவை டிஜிட்டல் தடயவியல் பிரிவில் முன்னிலையாகுமாறு உத்தரவு!
#SriLanka
#Court Order
#Lanka4
Dhushanthini K
1 year ago

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸை அவமதிக்கும் வகையில் முகநூல் மற்றும் யூடியூப் சேனல்களில் அறிக்கைகளை வெளியிட்மை தொடர்பில் விசாரணை செய்யவே அவர் மேற்படி அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, துமிந்த நாகமுவவை எதிர்வரும் 12ஆம் திகதி காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல்பிரிவில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.



