எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது" - அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன
#SriLanka
#Election
#Parliament
#Bandula Gunawardana
Mayoorikka
1 year ago

அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் ஒத்திவைக்காது என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (செப்டம்பர் 5) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு தேர்தலும் திட்டமிட்ட தேதியில் வழக்கமான முறையில் நடத்தப்படுவதாகவும், அதில் எந்த சந்தேகமும் ஏற்படத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.



