காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்
#SriLanka
#Court Order
#people
#Lanka4
Kanimoli
1 year ago

காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. கைதிகளுக்கு காய்ச்சல் மற்றும் தோல் நோய் பரவி வருவதால், கடந்த சில நாட்களாக கைதிகளை பார்க்க உறவினர்கள் தடை விதிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், கைதிகளை இனி வெளியே அழைத்துச் செல்ல மாட்டோம் என சிறைத்துறை தெரிவித்துள்ளது. காலி சிறைச்சாலையில் கைதிகள் மத்தியில் பரவிய நோயினால் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக வைத்தியசாலியில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9.
அவர்களில் 4 பேர் கராபிட்டிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



