கண்டி பல்வகை போக்குவரத்து நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
#SriLanka
#Lanka4
Dhushanthini K
1 year ago

07 வருடங்களாக நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கண்டி பல்வகை போக்குவரத்து நிலையத்தின் நிர்மாணப் பணிகள் இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர், உலக வங்கியின் உதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படாவிட்டால் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.



