முன்பள்ளிக் கல்வி தொடர்பில் வெளியான தகவல்

முன்பள்ளிக் குழந்தைகளில் 15 விழுக்காட்டினர் மட்டுமே முதல் தரக் கல்வி நிலைக்கு இணையான முன்பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெறுவதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
ஆரம்பக் கல்வியின் முதல் வகுப்பிற்குள் நுழையும் குழந்தைகள் வெவ்வேறு முன் கல்வி நிலைகளிலிருந்து சுமார் ஐந்து வகையான முன்பள்ளிகளில் பல வகைகளுடன் பள்ளிக் கல்வியில் நுழைகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் உருவாகும் பாதகமான கல்வி முரண்பாடுகளை நீக்குவதற்கு முன்பள்ளிக் கல்விக்கான தேசிய கொள்கையொன்று உடனடியாக தயாரிக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
ஆரம்பக் கல்வியில் ஈடுபடும் ஆசிரியர்களும் முறையான ஆசிரியர் பயிற்சியைப் பெற்று சர்வதேச மட்டத்திற்கு ஏற்ற வகையில் தமது அறிவுஇ மனப்பான்மை மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கூறுகிறார்.
எதிர்காலத்தில் அனைத்து கல்லூரிகளும் இணைக்கப்படும். ஒரேயொரு ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகத்தின் ஊடாக ஆசிரியர்கள் பட்டதாரிகளாக பாடசாலை அமைப்புக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



