இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர்!
#India
#SriLanka
#Defense
Mayoorikka
2 years ago
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கனியவளத்தை பரிமாறிக்கொள்வதற்காக குழாய் ஒன்றை அமைப்பதற்கான மூலோபாய முதலீட்டிற்காக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செப்டெம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.