நேபாளத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 8 பயணிகள் உயிரிழப்பு!
#India
#Accident
#2023
#Tamilnews
#Nepal
#Breakingnews
Mani
2 years ago

நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 300 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பெனி-ஹில்லி மாவட்டத்தை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. தாடிங் மாவட்டத்தில் உள்ள கஜூரி பகுதி அருகே வந்தபோது, அருகில் இருந்த திரிசூலி ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது. அப்போது காத்மாண்டுவில் இருந்து 60 கி.மீ தொலைவில் பேருந்து இருந்தது.
பேருந்தின் ஒரு பகுதி தண்ணீருக்கு அடியில் இருந்ததால் 8 பயணிகள் உயிரிழந்தனர். மேலும், 19 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக மீட்பு குழுவினர் மற்றும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை தொடங்கினர். உயிரிழந்தவர்களில் 2 பேர் பெண்கள் மற்றும் 6 பேர் ஆண்கள். அவர்களை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.



