போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட 400 சொகுசு வாகனங்கள்: விசாரணை சிஐடியிடம்
மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்கள அதிகாரிகள் அடங்கிய குழுவினால் 400 சொகுசு வாகனங்களை விற்பனை செய்யும் பாரிய மோசடி தொடர்பிலான விசாரணைகளில் இருந்து ஊழல் தடுப்புப் பிரிவினர் நீக்கப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களை தயாரித்த வாகன உரிமையாளர்களில் பலம் வாய்ந்த அரசியல்வாதிகள், பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், அரச அதிகாரிகள், பணக்கார வர்த்தகர்கள் உட்பட பல உயரதிகாரிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட 50 வாகனங்கள் வளான ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பாரிய மோசடியில் மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களத்தின் 05 உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளதாக வளன ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.