போதைப்பொருளை ஒழிப்பதற்கான விசேட திட்டத்தை தயாரிக்க அரசாங்கம் கவனம்
#SriLanka
#drugs
Prathees
2 years ago
போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் விசேட மூலோபாயத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ், ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை, தேசிய புகையிலை மற்றும் போதைப்பொருள் அதிகாரசபை ஆகியவற்றிடமிருந்து தேவையான முன்மொழிவுகள் பெறப்பட உள்ளன.
போதைப்பொருளை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நிறுவப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவிற்கு அந்த நிறுவனங்களும் அழைக்கப்பட்டு அதிலிருந்து பெறப்படும் யோசனைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.