இலங்கை கடன் நெருக்கடியில் இருந்து மீள உதவும் சீனா - இந்தியா பாராட்டு!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
இலங்கையின் கடன் நிவாரண முயற்சிகளில் சீனாவும் இணைந்துகொள்ளவேண்டும் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையை கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக இந்தியா ஜப்பான் பிரான்ஸ் ஆகியநாடுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளில் சீனாவும் இணைந்துகொள்வதை வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடன் நெருக்கடியில் சிக்குண்டுள்ள நாடுகளிற்கான நிவாரண நடவடிக்கைகளை உலகவங்கியும் சர்வதேச நாணயநிதியமும் துரிதப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.