போலி விசாவை பெற்றுக்கொடுத்த குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிக்கு விளக்கமறியல்!
#SriLanka
#Colombo
#Airport
#Lanka4
#Visa
Thamilini
2 years ago
போலி விசாவை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயன்ற பெண் ஒருவர் உட்பட இருவர் குற்றப்புலானய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் நேற்று (28.07) கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் போலி விசாவை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த பெண் பண்டார்நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படதுடன், குறித்த போலி விசாவை வழங்கிய குடிவரவு குடியகல்வு திணைக்களஅதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், பெண்ணுக்கு பிணை வழங்கி நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
அதேநேரம் போலி விசாரவை வழங்கிய அதிகாரி வரும் 11 ஆம் திகதிவரையில் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளார்.