காட்டிக்கொடுத்துவிட்டு அரசியல் செய்ய வந்தவர்கள்தானே நீங்கள்: சாணக்கியன்
#Tamilnews
#sri lanka tamil news
#srilankan politics
#sanakkiyan
Soruban
2 years ago
மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இன்றைய தினம் (25.07.2023) குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.
மக்கள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்த போது காணொளியொன்றை காட்சிப்படுத்த சாணக்கியன் அனுமதி கோரியுள்ளார்.
எனினும் அதற்கு அனுமதி வழங்கப்படாமையால் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் (பிள்ளையான்) இருவருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது சந்திரகாந்தன், சாணக்கியனை “போடா” என தெரிவித்ததையடுத்து சாணக்கியன் விடுதலைப்புலிகளினை காட்டிக்கொடுத்தவர்கள்தானே நீங்கள் என காரசாரமாக பேசியிருந்தார்.