இலங்கையில் 95 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை
#SriLanka
Prathees
2 years ago
இந்நாட்டில் சுமார் 95 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை என இலங்கை உயிர்காக்கும் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார கூறுகையில், மீனவர்களுக்கு நீரில் மூழ்கும் அபாயம் சாதாரணமாகிவிட்டது.
எவ்வளவு சிறந்த நீச்சல் வீரராக இருந்தாலும், கடலில் அல்லது ஆறுகளில் பயணம் செய்யும் போது கட்டாயமாக உயிர்காக்கும் ஆடைகளை அணிய வேண்டும் என இலங்கை உயிர்காக்கும் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நீரில் மூழ்கி இலங்கையில் நாளாந்தம் மூன்று பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் டொக்டர் சமிதா சிரிதுங்க தெரிவித்துள்ளார்.