கடன் மறுசீரமைப்பு: உள்நாட்டு முதலீட்டாளர்களின் பணப் பரிமாற்றத்தை குறைக்கும்
#SriLanka
#IMF
#money
Mayoorikka
2 years ago
இலங்கை அரசாங்கத்தினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம் உள்நாட்டு காப்புறுதியாளர்களுக்கான முதலீடு மற்றும் நாணய பரிமாற்றத்தை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட கடன்மறுசீரமைப்பு திட்டம், காப்புறுதியாளர்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் உள்நாட்டு நாணய அரச கடனில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாது என நம்பப்படுகின்றது.
இதன் காரணமாக காப்பீட்டாளர்களின் முதலீடு மற்றும் மூலதனம் என்பனவற்றின் அழுத்தம் மட்டுப்படுத்தப்படும் என ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எப்படியிருப்பினும், இந்த முன்மொழிவு இறையாண்மையின் கடன்நிலை தன்மை திட்டத்தின் பகுதி மட்டுமே என குறிப்பிடப்பட்டுள்ளது