மைத்திரி வழங்கிய மன்னிப்பை செல்லுபடியற்றதாக்க கோரும் மனு மீதான விசாரணை நிறைவு!
#SriLanka
#Court Order
#Maithripala Sirisena
Prathees
2 years ago
றோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய மன்னிப்பு மற்றும் ரத்து உத்தரவை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது.
இதன்படி, அதன் தீர்மானம் குறித்த அறிவிப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணை நடத்தப்பட்டது.
அனைத்து தரப்பினரும் முன்வைத்த வாய்மூல உரைகளின் சமர்ப்பிப்பு இன்று (24) நிறைவடைந்துள்ளதுடன், எழுத்து மூலமான உரைகள் இருப்பின் அவற்றை ஆகஸ்ட் 25 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.