யாழ். புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு!
#SriLanka
#மரணம்
#யாழ்ப்பாணம்
Mugunthan Mugunthan
2 years ago
கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த Intercity (AC) ரயில் சற்று முன்னர் காலை 11.30 மணியளவில் மீசாலை புகையிரத நிலையத்துக்கு அருகில் புகையிரத கடவையை கடந்த நபர் மீது மோதியதில் ஒருவர் பலியானார்.
மோட்டார் சைக்கிளில் புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட போதே விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் மீசாலை கிழக்கை சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரே உயிரிழந்துள்ளார்.