வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை - அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் வாகனங்களை இறக்குமதி செய்ய முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த அனைத்து வாகன உதிரி பாகங்களுக்குமான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய வெளிநாட்டு கையிருப்பைக் கருத்தில் கொண்டு மத்திய வங்கியின் பரிந்துரைகளின் அடிப்படையில் வாகனத்தை இறக்குமதி செய்ய கவனம் செலுத்தப்படும் எனக் கூறினார்.
எவ்வாறாயினும் வாகனங்களின் இறக்குமதி விடயத்தில் வெளிநாட்டு கையிருப்பு குறித்து கவனம் செலுத்தி முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.