மோடியுடனான சந்திப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் ஜனாதிபதி!
#India
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#Visit
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய விஜயத்தினை முடித்துக் கொண்டு நேற்றிரவு வெள்ளிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதியுடன் 17 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இந்தியாவின் புதுடில்லிக்கு 20 ஆம் திகதி வியாழக்கிழமை சென்றிருந்தனர்.
ஜனாதிபதியுடன் இவர்கள் அனைவரும் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமானம் UL196 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தேவால் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவர்த்தைகளை நடத்தியிருந்தார்.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற நிலையில், ஒருவருடத்தின் பின் இந்தியாவுக்கான முதல் விஜயத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.