இந்த நேரத்தில் நாட்டு மக்களுக்கு தேர்தல் தேவையில்லை-வஜிர அபேவர்தன
#SriLanka
#Lanka4
#Election Commission
#Sri LankaElection
Kanimoli
2 years ago
இந்த நேரத்தில் நாட்டு மக்களுக்கு தேர்தல் தேவையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். தேர்தலை விட தற்போது மக்களுக்குத் தேவை ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றார்.
கடந்த வருடம் இந்நாளில் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளை நிவர்த்தி செய்தமைக்காக ஜனாதிபதிக்கு விசேட கௌரவம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.