கலால் திணைக்களத்தால் 6 மாதங்களில் 2687 பெண்கள் கைது
#SriLanka
#Arrest
Prathees
2 years ago
கடந்த 6 மாதங்களில் நாடு முழுவதும் கலால் திணைக்களம் 20,121 சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பான சோதனை நடவடிக்கைகளில் 20,121 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 2,687 பேர் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் 57 கலால் நிலையங்கள் மற்றும் 5 கலால் விசேட அதிரடிப் பிரிவுகள் மற்றும் கலால் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.