வவுனியாவில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் : ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்!

#SriLanka #Vavuniya #Lanka4
Thamilini
2 years ago
வவுனியாவில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் :  ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்!

வவுனியாவில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். 

குறித்த நால்வரும் வவுனியா பொதுவைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வவுனியா - பட்டாணிச்சூர் பகுதியில் நேற்று (15.07) இடம்பெற்ற இந்த மோதலில், செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். 

இன அடிப்படையில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. 

இதனை அடிப்படையாகக் கொண்டு நெளுக்குளம் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4