அமெரிக்காவில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 30 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துவருகின்ற நிலையில், இந்த ஆண்டின் முற்பகுதியில் மாத்திரம் சுமார் 30 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
இது கடந்த 2006 ஆம் ஆண்டில் பதிவாகியதை விட அதிகம் என தரவுகள் கூறுகின்றன. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஏறக்குறைய 150 பேர்உயிரிழந்துள்ளதாகவும், 70 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான வெகுஜன கொலைகளில் அபாயகரமான உயர்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ள, பேராசிரியர் ஜேம்ஸ் ஆலன் ஃபாக்ஸ், நடப்பு ஆண்டு சாதாரணமாக இல்லை என்று வலியுறுத்துகிறார்.
வெகுஜனக் கொலைகளின் அதிர்வெண் மற்றும் தீவிரம் அபாயகரமான உச்சத்தை எட்டியுள்ளது எனவும் இது ஒரு பயங்கரமான அளவுகோலை அமைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பதிவுசெய்யப்பட்ட 30 படுகொலைகளில், எட்டு கொலைகள் பொது இடங்களில் நடந்தன, அரிசோனா, கலிபோர்னியா, பென்சில்வேனியா மற்றும் டென்னசி போன்ற மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
வெகுஜன கொலைகள் தலைப்புச் செய்திகளைப் பிடிக்கும் அதே வேளையில், துப்பாக்கி வன்முறைக் காப்பகம், துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது நான்கு நபர்கள் காயமடையும் ஒரு சம்பவமாக வரையறுக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



