தென்கொரியாவில் கனமழையில் சிக்கி 7க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
#SouthKorea
#HeavyRain
#Rescue
Prasu
2 years ago

தென்கொரியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்கு பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
அங்குள்ள நோன்சான், யோங்ஜூ ஆகிய பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து 4 பேர் செத்தனர். அதேபோல் செஜோங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



