ஹார்முஸ் ஜலசந்தி அருகே பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்கா!
#world_news
#Lanka4
Dhushanthini K
2 years ago

ஈரானிய தாக்குதல்களுக்கு எதிராக கப்பல்களை பாதுகாக்க ஹார்முஸ் ஜலசந்தி அருகே எஃப்-16 போர் விமானங்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜலசந்திக்கு அருகாமையில் இரண்டு எண்ணெய் டேங்கர்களைக் கைப்பற்ற ஈரான் முயற்சித்த நிலையில் அந்த முயற்சி அமெரிக்க கடற்படையால் தோற்கடிக்கப்பட்டது.
இந்நிலையில் ஈரானியப் படையெடுப்புகளில் இருந்து கடல் கப்பல்களைப் பாதுகாக்க கு -16 போர் விமானங்களை அனுப்ப அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்மூலம் ஹார்முஸ் ஜலசந்தியின் மூலோபாய ஜலசந்தியில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை கணிசமாக அதிகரிக்கிறது எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



