டெல்லியில் வெள்ளத்தின் காரணமாக பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளது
#India
#Lockdown
#Delhi
#Flood
#HeavyRain
#Breakingnews
#ImportantNews
#petrol
Mani
2 years ago

கனமழை காரணமாக, டெல்லி மாநிலம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இடுப்பு அளவு நீரில் மக்கள் நடந்து செல்கின்றனர். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், குடியிருப்புவாசிகள் சிரமப்படுகின்றனர்.
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் மற்றும் தற்காலிக கூடாரங்களில் தற்காலிக தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
இதனால், மின்சாரம் மற்றும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதேபோல், பெட்ரோல் நிலையங்கள் மூடப்படுவதும் மழைநீர் உட்புகுவதால் அவை மூடப்பட்டு வருகிறது. இதனால், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.



