ரஷ்ய இராணுவத்தினரிடம் ஆயுதங்களை ஒப்படைத்துள்ள வாக்னர் படையினர்!
#Russia
#War
Dhushanthini K
2 years ago

வாக்னர் குழுவின் கூலிப்படையினர் தங்கள் ஆயுதங்களை ரஷ்ய இராணுவத்திடம் ஒப்படைப்பதை நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாக்னர் படையினர் ரஷ்யா மீது மேற்கொண்ட கிளர்ச்சி நடவடிக்கையை தொடர்ந்து உக்ரைனில் அவர்களின் செயற்பாட்டை கட்டுப்படுத்த மொஸ்கோ நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது.
இதற்கமைய ஆயுதங்களை ஒப்படைக்க வாக்னர் குழுவினருக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டாங்கிகள், ராக்கெட் ஏவுகணைகள், கனரக பீரங்கி மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற 2,000 க்கும் மேற்பட்ட உபகரணங்கள், 2,500 மெட்ரிக் டன் வெடிபொருட்கள் மற்றும் 20,000 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை வாக்னர் படையினர் ஒப்படைத்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.



