சர்ச்சைக்குரிய இரு மயக்க மருந்துகள் பாவனையில் இருந்து நீக்கம்!
#SriLanka
#Medicine
Mayoorikka
2 years ago
கடந்த காலங்களில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திய இரு மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவற்றுக்கு பதிலாக வேறு மயக்க மருந்தொன்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மருந்து தொகை நாளை நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுளார்.
அண்மையில் குறித்த மயக்க மருந்தினைப் பயன்படுத்தி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்கள் சிலர் உயிரிழந்தமையை அடுத்து, குறித்த மயக்க மருந்து தொடர்பில் சுகாதார தரப்பினர் தமது கவனத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.