2022 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களுக்கான பொறியியல் தொழிநுட்ப பரீட்சை இன்று ஆரம்பம்!

#SriLanka #Lanka4 #Examination
Thamilini
2 years ago
2022 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களுக்கான பொறியியல் தொழிநுட்ப பரீட்சை இன்று ஆரம்பம்!

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பொறியியல் தொழிநுட்ப பாடத்திற்கான நடைமுறைப் பரீட்சைகள் இன்று (12.07) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதிவரை நடைபெறும் இந்த பரீட்சைகளுக்காக 42 நிலையங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர்  லசிக சமரக்கோன் குறிப்பிட்டார்.

இந்த பரீட்சைக்கு  20,084 பேர் தோற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஏதேனும் நடைமுறை சிக்கல்கள் இருந்தால் 1911 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் லசிக சமரக்கோன் அறிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4